வெள்ளி, 18 டிசம்பர், 2009

கேள்​விக்​கு​றி​யா​கும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை

எம். சேது​ராம​லிங்​கம்                                                                                   நன்றி - தினமணி 

க​ட​லோ​டும், கடற்​க​ரை​யோ​டும் பின்​னிப் பிணைந்​தது தான் மீனவ சமூ​கத்​தின் வாழ்க்கை. வர​லாறு முழு​வ​தும் பர​த​வ​ரின் சிறப்​பு​மிக்க பண்​பா​டும் வீர​மிக்க போராட்​டங்​க​ளும் மறைக்​கப்​பட்டே வந்​துள்​ளன. ÷ நாட்​டின் எல்​லைப் பகு​தி​க​ளான கடற்​க​ரை​க​ளில் வாழ்ந்து கொண்டு கடல்​புற வழி​யாக வெளி​நாட்டி​லி​ருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பா​ளர்​களை விரட்​டி​ய​டித்து தம் இன்​னு​யி​ரைத் தியா​கம் செய்து, நாட்​டைக் காப்​பாற்​றிய எல்​லை​யோ​ரக் காவ​லர்​க​ளாக வாழ்ந்​த​வர்​கள் தான் மீனவ சமூ​கத்​தி​னர். நாள்​தோ​றும் மீன​வ​ரின் தொழில் வாழ்க்கை என்​பது குளி​ரூட்​டப்​பட்ட அறை ஒன்​றுக்​குள் காலை 9 மணிக்​குத் தொடங்கி மாலை 5 மணி வரை அமர்ந்து பணி உத்​த​ர​வா​தத்​து​டன் ஓர் ஊழி​யர், அதி​காரி செய்​யும் வேலை​யைப் போன்​ற​தல்ல. கட​லுக்​குப் போனால் உயி​ருக்​கும், திரும்பி வரு​வ​தற்​கும் எந்​த​வித உத்​த​ர​வா​த​மும் இல்லை. உள்​ளூ​ரில் யார் காணா​மல் போனா​லும் தொலைக்​காட்சி உள்​ளிட்ட பல ஊட​கச் சாத​னங்​க​ளில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட்டு தனிப் போலீஸ்​படை அமைத்து தேடு​த​லும் முடுக்​கி​வி​டப்​ப​டு​கி​றது. ஆனால் மீன​வர்​கள் கட​லில் காணா​மல் போனால் வழக்​குக் கூட பதி​வா​காது. இப்​படி உயி​ரைப் பண​யம் வைத்து மீன​வர் பிடிக்​கும் மீன் ஏற்​று​ம​தி​யால் நாட்​டுக்​குக் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி பல ஆயி​ரம் கோடி​க​ளைத் தாண்​டும். ÷இந்​தியா உல​கின் மீன் உற்​பத்​தி​யில் மூன்​றாம் இடம் வகிக்​கி​றது. நன்​னீர் மீன் உற்​பத்​தி​யில் இரண்​டாம் இடம் வகிக்​கி​றது. இத்​த​னைக்​கும் மீன​வ​ரின் மக்​கள்​தொகை நாட்​டின் மக்​கள் தொகை​யோடு ஒப்​பி​டும் போது மிக​வும் குறை​வா​னதே. உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​கின்​படி மொத்த மீன​வர் 8.70 மில்​லி​யன். இதில் முழு நேர​மாக மீன்​பிடி தொழி​லில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 0.93 மில்​லி​யன், பகுதி நேர மீன​வர்​கள் 1.07 மில்​லி​யன், மீன் சார்ந்த மற்ற நட​வ​டிக்​கை​க​ளில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 3.96 மில்​லி​யன் ஆகும். ÷க​டுகு சிறுத்​தா​லும் காரம் போகாது. இவ்​வ​ளவு மக்​கள் தொகை​யில் சிறு​பான்​மை​யி​ன​ராக இருந்​தா​லும் தினந்​தோ​றும் உயி​ரைப் பண​யம் வைத்​துப் பிடிக்​கும் மீன்​பி​டிப்​பால் நாட்​டின் 20 சத​வி​கி​தம் அந்​நி​யச் செலா​வ​ணியை ஈட்​டித் தரு​கின்​ற​னர். அதே உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​குப்​ப​டியே கடந்த 2003-2004-ம் ஆண்​டின் மொத்த மீன் உற்​பத்தி 63-99 டன்​கள். மீன் குஞ்சு உற்​பத்தி 19,173 மில்​லி​யன். அதே காலத்​தில் ஏற்​று​மதி 5.21 லட்​சம் டன்​கள். அதா​வது, 6793.05 கோடி ரூபாய். இது கடந்த 2007-2008-ல் 9000 கோடி ரூபா​யாக அதி​க​ரித்​துள்​ளது. எந்​த​வித எதிர்​பார்ப்​பும் இன்றி பிர​தி​ப​லன் பாராது நாட்​டுக்கு உழைக்​கும் மீன​வர்​க​ளுக்கு அரசு என்ன தான் செய்​துள்​ளது? ÷மீ​ன​வ​ரைக் கடற்​க​ரையி​லி​ருந்​தும், மீன்​பிடி தொழி​லி​லும் இருந்​தும் அகற்​றிட அரசு மறை​மு​க​மா​க​வும் நேர​டி​யா​க​வும் பல சட்​டங்​கள், கொள்​கை​கள் மற்​றும் திட்​டங்​களை உரு​வாக்கி வரு​கி​றது. இது சற்று அதிர்ச்​சி​யாக இருக்​க​லாம். ஆனால் இது​தான் உண்மை. கடந்த சில பத்​தாண்டு கால வர​லாற்​றில் நடந்த நிகழ்​வு​கள் இந்த உண்​மையை நமக்கு உணர வைக்​கின்​றன. ஏன் இப்​படி நடக்​கி​றது? ஒப்​பீட்​ட​ள​வில் உல​கின் பல நாடு​க​ளின் கடற்​க​ரை​கள் மாச​டைந்​து​விட்​டன. கடல் வளங்​க​ளும், அள​வுக்கு அதி​கப்​ப​டி​யான மீன்​பி​டிப்​பால் சுரண்​டப்​பட்​டு​விட்​டன. உதா​ர​ண​மாக ஜப்​பான் மற்​றும் சில கிழக்​கா​சிய நாடு​க​ளி​லும், அமெ​ரிக்​கா​வி​லும் கடல் மீன்​வ​ளம் குறைந்​து​விட்​ட​ப​டி​யால் செயற்​கை​யான முறை​யில் நிலங்​க​ளி​லும், கடற்​க​ரை​க​ளி​லும் பாத்தி கட்​டி​யும், பண்ணை அமைத்​தும் மீன் வளர்க்க முயற்​சி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதே​ச​ம​யத்​தில் இதற்கு மாறாக இந்​தி​யக் கடற்​க​ரை​யும், கடல்​வ​ளங்​க​ளும் பெரு​ம​ள​வில் வளங்​குன்​றா​மல் அழ​கு​டன் திகழ்​கின்​றன. 7,517 கி.மீ. நீள​முள்ள இந்​தி​யக் கடற்​க​ரை​யை​யும் ஆண்​டுக்கு பல ஆயி​ரம் கோடி வரு​வாய் தரும் கடல் வளத்​தை​யும் குறி வைத்து ஏரா​ள​மான தனி​யார் சுற்​றுலா நிறு​வ​னங்​க​ளும், அந்​நிய மீன்​பிடி நிறு​வ​னங்​க​ளும் வரத் துவங்​கி​விட்​டன. நாட்​டின் உல​க​ம​ய​மாக்​கல் கொள்​கை​கள் அமல்​ப​டுத்​தத் துவங்​கி​யதி​லி​ருந்து டாலர் குவி​யும் இட​மா​கக் கடற்​க​ரை​யைப் பார்க்​கத் தொடங்​கி​விட்​ட​னர். இக்​கா​லந்​தொட்டே கடற்​க​ரையை ஆக்​கி​ர​மிக்​கும் திட்​டங்​கள் அணி வகுக்​கத் தொடங்​கி​விட்​டன என்​பது கவ​னிக்​கத்​தக்​கது. ÷க​டற்​க​ரை​யில் ஓய்வு விடு​தி​கள், ரிசார்ட்​டு​கள், நீர் விளை​யாட்​டு​கள், மிதவை ஹோட்​டல்​கள் கட்டி வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்கு வாட​கைக்கு விட்​டால் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி அதி​க​மா​கும். அதே​போன்று வெளி​நாட்டு நிறு​வ​னங்​கள், தொழிற்​சா​லை​கள், அனல் மின் நிலை​யங்​கள், அணு​மின் நிலை​யங்​கள், கணிப்​பொ​றி​த​க​வல் தொழில் நுட்​பப் பூங்​காக்​கள் இவற்றை உள்​ள​டக்​கிய சிறப்​புப் பொரு​ளா​தார மண்​ட​லங்​கள் எனக் கடற்​க​ரை​யில் அமைந்து கொண்​டி​ருக்​கும் மற்​றும் அமைய இருக்​கும் வளர்ச்​சித் திட்​டங்​க​ளின் பட்​டி​யல் முடி​வில்​லா​மல் நீள்​கி​றது. இவர்​க​ளின் நிர்​பந்​தத்​தால் கடற்​கரை மண்​டல ஒழுங்​கு​முறை அறி​விப்​பாணை 1991  பல​முறை திருத்​தப்​பட்டு நீர்த்​துப் போகச் செய்​யப்​பட்​டது. இத​னைப் பலப்​ப​டுத்​து​வ​தற்கு விவ​சாய விஞ்​ஞானி எம்.எஸ். சுவா​மி​நா​த​னின் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்​டி​யின் பரிந்​து​ரை​க​ளின் அடிப்​ப​டை​யில் கடற்​கரை மண்​டல மேலாண்மை அறி​விப்​பாணை இயற்​றப்​பட்​டது. இந்த அறி​விப்​பா​ணை​யா​னது கடற்​க​ரையி​லி​ருந்து 1 கி.மீ.(1000 மீட்​டர்) தொலை​வுக்கு அப்​பால் மீன​வர்​கள் செல்ல வேண்​டும் என்​றும் கட​லுக்​குள் 12 கடல் மைல்​க​ளுக்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைக்​கப்​பட வேண்​டும் (மீன் பிடிக்க அனு​ம​தி​யில்லை என்​பது மறை​மு​க​மா​னது) என்​றும் பரிந்​து​ரைத்​தது. இது மீன​வர்​க​ளுக்கு எதி​ராக இருந்​தது. கடல்​வ​ளத்​தை​யும் கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்​குத் தாரை​வார்ப்​ப​தாக இருந்​தது அனை​வ​ரும் அறிந்​ததே. இதற்கு மீன​வர்​கள் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​த​தால் திரும்​பப் பெறப்​பட்​டது. அதற்​குப் பதி​லாக இப்​போது கடல் மீன்​பிடி (ஒழுங்​கு​முறை மற்​றும் மேலாண்மை) சட்ட முன் வரைவு மசோதா 2009-ல் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. ÷இப்​பு​திய சட்ட முன் வரைவு மறை​மு​க​மாக அல்ல, ஒளி​வு​ம​றை​வாக கூட இல்​லா​மல் நேர​டி​யாக மீன​வர்​களை அழிப்​ப​தற்கு குறி வைத்து ஏவி​வி​டப்​பட்​டுள்​ளது. இச்​சட்ட முன்​வ​ரைவு நாடா​ளு​மன்​றத்​தில் சட்​ட​மாக நிறை​வேற்​றப்​பட்​டால் மீன​வர்​க​ளின் வாழ்​வு​ரிமை முற்​றி​லு​மா​கப் பாதிக்​கப்​ப​டும். மீன​வர்​க​ளின் இனமே கூண்​டோடு அழிக்​கப்​ப​டும். ஒடுக்​கு​மு​றை​யின் உச்​ச​மாக உள்ள இச்​சட்​டத்​தின் முக்​கி​யப் பிரி​வு​கள்   மீன​வர்​கள் 12 கடல் மைல்​க​ளுக்கு மேல் அதா​வது ஆழ்​க​ட​லுக்கு மீன்​பி​டிக்​கச் செல்​லக் கூடாது. மீறிச் சென்​றால் 3 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை அல்​லது 9 லட்​சம் ரூபாய் அப​ரா​தம் அல்​லது இரண்​டும் ஒரு சேர விதிக்​கப்​ப​டும். ரூ. 10,000-த்துக்கு மேல் மீன்​பி​டிக்​கக்​கூ​டாது. அப்​படி மீன்​பி​டிக்​கும்​பட்​சத்​தில் பட​கும், பிடிக்​கப்​பட்ட மீனும் மத்​திய அர​சால் பறி​மு​தல் செய்​யப்​ப​டும், ஏலம் விடப்​ப​டும். அப்​ப​ட​கில் உள்ள மீன​வர் தலா ஒவ்​வொ​ரு​வ​ருக்​கும் 25,000 ரூபாய் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும். ÷எல்​லா​வற்​றுக்​கும் மேலாக அந்​நிய பன்​னாட்டு நிறு​வ​னம், அந்​நிய நிறு​வ​னத்​தின்  கப்​பல்​க​ளுக்கு ஆழ்​கட​லில் மீன்​பி​டிக்க அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் கப்​பல்​க​ளுக்கு அனு​மதி அளிக்​கும் கடித முறை ஏற்​கெ​னவே அம​லில் இருந்து வரு​கி​றது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது. ÷வெ​ளி​நாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு நமது கட​லில் ஆராய்ச்சி செய்ய அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தச் சட்​டத்​தின்​படி மரபு வழி மீன​வர்​கள் எந்​தெந்த மாதங்​க​ளில் எந்​தெந்த மீன்​பி​டிக்க வேண்​டும், எவ்​வ​ளவு காலம் மீன்​பி​டிக்க வேண்​டும், எவ்​வ​ளவு மீன்​பி​டிக்க வேண்​டும் எந்​தக் கரு​வியை, எந்த அள​வுள்ள பட​கைப் பயன்​ப​டுத்தி எந்த இடத்​தில் மீன்​பி​டிக்க வேண்​டும் என்​பதை மத்​திய அரசு விதி​கள் மூல​மாக அறி​விக்​கும்.  கடல் மீன்​பிடி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் நோக்​க​மாக தேசி​யப் பாது​காப்​புச் சட்​டம் ஒழுங்​கைக் காப்​ப​து என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது. தேசி​யப் பாது​காப்​புக் கரு​தியோ, சட்​டம் ஒழுங்​கைக் கார​ணம் காட்​டியோ படகு உரி​மை​யா​ள​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள அனு​ம​தியை ரத்து செய்​யும் அதி​கா​ரம் மத்​திய அர​சுக்கு உண்டு. ÷ஏற்​கெ​னவே கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் கப்​பல் படை​யி​ன​ரும் கட​லில் மீன்​பி​டிக்​கும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்தி வரு​கின்​ற​னர். இப்​போது இச்​சட்​டத்​தின்​படி தேசி​யப் பாது​காப்பு என்ற பெய​ரிலோ சட்​டம் ஒழுங்​குக்​குப் பாத​க​மா​கச் செயல்​பட்​டார் என்றோ கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் காவல்​து​றை​யி​ன​ரும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்​து​வது சட்​ட​பூர்​வ​மா​கி​வி​டும். அது தொடர்​க​தை​யா​கி​வி​டும். மேலி​ருக்​கும் சட்​டப்​பி​ரி​வு​க​ளைப் படிக்​கும் யாரும் நமது கட​லில் மீன்​பி​டிக்க பாரம்​ப​ரி​ய​மான மீன​வர்​க​ளுக்கு அனு​மதி இல்லை. பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு மட்​டுமே அனு​மதி அளிக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தைப் புரிந்​து​கொள்ள முடி​யும்.    நமது மீன​வர்​களை மீன்​பி​டிப்​புத் தொழிலி​லி​ருந்து விரட்டி அடிப்​ப​தற்​கான சட்​ட​பூர்வ முயற்​சியே இது. அன்று தேசத்​தின் விடு​த​லைக்​கா​கப் போரா​டி​ய​வர்​களை ஒடுக்​கு​வ​தற்​காக வெள்ளை ஏகா​தி​பத்​தி​யத்​தால் போடப்​பட்​டது, ரெüலட் என்ற ஒடுக்​கு​மு​றைச் சட்​டம். அதற்கு சற்​றும் குறைந்​த​தல்ல இச்​சட்​டம். இச்​சட்​டம் வந்​தால் மீன​வர்​கள் கடலி​லி​ருந்​தும் கடற்​க​ரையி​லி​ருந்​தும் விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது நிச்​ச​யம். மீன​வர்​கள் மத்​தி​யில் பட்​டி​னிச்​சா​வு​கள் அதி​க​ரிக்​கும். கடல் வளத்​தை​யும், கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் ஆக்​கி​ர​மித்​துக் கொள்​ளை​ய​டித்து முழு​வ​தை​யும் சுரண்​டப்​போ​வது நிச்​ச​யம்.   எனவே, எல்லா வகை​யி​லும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை கேள்​விக்​குள்​ளாக்​கப்​ப​டு​வது உறு​தி​யா​கி​விட்​டது. இப்​போது நாடு முழு​வ​தும் எழுந்த மீன​வர்​க​ளின் கடும் எதிர்ப்​பி​னால் சட்​ட​முன் வரை​வைத் தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைப்​ப​தா​க​வும், ஆனால் திருத்​தங்​க​ளு​டன் கொண்டு வரப்​போ​வ​தா​க​வும் அறி​வித்​துள்​ளது, மீன​வர்​க​ளின் மனங்​க​ளின் நீங்​காத அச்​சத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது. மீன​வர்​க​ளின் துயர் என்​று​தான் தீருமோ?

திங்கள், 14 டிசம்பர், 2009

.........


சனி, 12 டிசம்பர், 2009

மீனவர் பொது விசாரணை மன்றம்

தங்கச்சிமடத்தில் மீனவர் பொது விசாரணை மன்றம்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த மீனவர் பொது விசாரணை மன்றத்தில் முன்னாள் கவர்னர், தலைமை நீதிபதி முன் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்தனர்.

மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பொது விசாரணை தீர்ப்பாயம் மற்றும் மீனவர் மாநாடு நடந்தது. நிரபராதி மீனவர் கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் தலைமை வகித்தார். சேதுபதி நாட்டார் மாநாடு கொடியேற்றினார்.இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டிற்கு பலியான மீனவர்களின் நினைவு தூணை ராஜேந்திர நாட்டார் திறந்து வைத்தார்.

இதில் பங்கேற்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சாமி பேசுகையில்,""1983 லிருந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி பேதமில்லாமல் இணைந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்'' என்றார்.

ரித்திஷ்குமார் எம்.பி., ஹசன்அலி எம்.எல்.ஏ., மாவட்ட காங்., தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, முத்தரையர் மீனவர் சங்க தலைவர் செல்லத்துரை, பரவர் நலப்பேரவை தலைவர் சிப்பிசேசு, ஊராட்சி தலைவர் அருள் உட்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மீனவர் பொது விசாரணை மன்றம் நடந்தது. கேரள முன்னாள் கவர்னர் சுகதேவ்சிங்கேங்க், முன்னாள் தலைமை நீதிபதி பார்கவா, காந்தி கிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட நாகபாண்டி(ராமேஸ்வரம்)முருகதாஸ்( பட்டுக்கோட்டை) குப்புசாமி (நாகப்பட்டினம்) தங்கச்சாமி(புதுக்கோட்டை) உட்பட14 மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மூன்று ஆண்டாக தலையில் துப்பாக்கி குண்டுடன் இருக்கும் காரைக்கால் மீனவர் சவுந்தர்ராஜ் பேசுகையில்,"" 2006 ல் நடுக்கடலில் இலங்கை கடற்படை சுட்டதில் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இன்னும் குண்டு சிதறல்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து என்பதால் தலையில் இருக்கும் குண்டு சிதறலை இன்னும் எடுக்கவில்லை'' என்றார்.

திங்கள், 7 டிசம்பர், 2009