செவ்வாய், 3 மார்ச், 2009

வாழ்க பாரதம். வளர்க இந்தியர்

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்:
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் (தமிழர்களால் ஓட்டுப்போட்டு தமிழ்நாட்டில் இருந்து போன தமிழன்) கூறியிருப்பதாவது:
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கண்டனத்திற்குரியது. பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (நம்ம கலைஞர் படத்தின் கதாநாயகன்தான்): இது முரட்டுத்தனமான தாக்குதல். பயங்கரவாதத்தின் ஆணிவேர் அறுக்கப்பட வேண்டும். இனிமேலாவது சர்வதேச நாடுகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலே கண்டது செய்தி:
இவர்கள் கண்டனம் வரவேற்க கூடியதுதான். யாருடைய நிர்பந்தமும் இல்லாமல், அரசின் குரலாக ஒலிக்கும் இவர்கள் குரல், ஏன் ஈழமக்கள் சாகும்போது அதிர்ச்சி வரவில்லை?. ராஜபக்ஸே கொன்று குவிப்பது முரட்டுத்தனம் இல்லையா?. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும். இலங்கையை வாழ்த்த வேண்டுமா?. சிங்களவன் தமிழனுக்கு எதிரியல்ல. ஆனால் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள வெறியர்களை கண்டிக்காத இந்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பு கொடு என்கின்றது. இத்தனைக்கும் ஒருவன் கூட சாகவில்லை. எம்மக்கள் அழிகின்றார்கள் என்று குரல் கொடுத்தால் சிறைவாசம். இந்திய அரசின் கபட நாடகத்தை புட்டு வைத்தால் பிரிவினை வாதம். நாமெல்லாம் இந்தியர்கள். இந்தியா சனநாயக நாடு. வாழ்க பாரதம். வளர்க இந்தியர். அப்போ நாம? ...... ...
செ. இ. பிரபாகரன், குடிமக்கள் சனநாயகம், தூத்துக்குடி

2 கருத்துகள்: